search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    சிதம்பரம் கைதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தூத்துக்குடி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

    ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, நிர்வாகிகள் டேனியல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் டேவிட் பிரபாகரன், சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார், மகளிர் அணி முத்துவிஜயா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சகாயராஜ் மற்றும் எடிசன் சாமுவேல் ஞானதுரை, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×