search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நாங்குநேரி அருகே தொழிலாளி தற்கொலை

    நாங்குநேரி அருகே குடி பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்தவர் தொழிலாளி லிங்கத்துரை (வயது 58). இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இவர் அதே ஊரைச் சேர்ந்த அய்யாத்துரை தோட்டத்தில் விவசாய வேலைகள் செய்து வருகிறார். லிங்கத்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. 

    இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று அங்குள்ள பெருமாள் கோவில் அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து அவரது மகன் பரஞ்ஜோதி (25) அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×