என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொழிலில் நஷ்டம்: வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
மதுரை:
உசிலம்பட்டியை அடுத்த சி.நாட்டாப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). இவர் கர்நாடக மாநிலத்தில் ‘மிக்சர்’ வியாபாரம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சுந்தருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுந்தர் சம்பவத்தன்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுந்தர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அழகர்கோவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமசாமி (34). இவரது மனைவி கார்த்திகா, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளான ராமசாமி நேற்று அழகர் கோவில் சமுதாய நலக்கூடத்தில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்