search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆண்டிப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவன் கைது

    ஆண்டிப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி அன்னப்பிள்ளை (வயது 35). மகாராஜன் குடிப்பழக் கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னப்பிள்ளை உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் மகாராஜன் அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் மனைவி தனது கணவரிடம் இது குறித்து கடுமையாக பேசியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் மற்றும் கணேசன், சீலையம் மாள் ஆகியோர் அன்னப் பிள்ளையை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.

    Next Story
    ×