என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பயங்கரவாதிகளின் போட்டோக்களை போலீசார் வெளியிடவில்லை- டிஜிபி திரிபாதி விளக்கம்
தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டதாக இன்று காலையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதுதொடர்பான 2 பேரின் புகைப்படங்கள் தொலைக் காட்சிகளில் வெளியானது.
இதனை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மறுத்தார். இது தொடர்பாக அவரிடம் தொலை பேசியில் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் தொடர்பாக எந்த புகைப்படத்தையும் நாங்கள் வெளியிடவில்லை. அதுபோன்று புகைப்படங்கள் வெளியிடுவதாக இருந்தால் முறைப்படி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து விரிவான தகவல்கள் அறிக்கையாக அனுப்புவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை நாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் நுழைந்ததாக வெளியான தகவலையடுத்து கோவில்கள், வணிக வளாகங்கள், விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
ராணுவம் மற்றும் விமான படையை தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்