என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்23 Aug 2019 9:44 AM GMT (Updated: 23 Aug 2019 9:44 AM GMT)
திண்டுக்கல் அருகே காதல் தோல்வியில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள சிந்தலக்குண்டு காலாடி பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வல்லரசு (வயது 19). இவர் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தார். நேற்று இரவு வீட்டில் தூங்கச் சென்ற பின் தனது அறையில் வாந்தி எடுத்துள்ளார்.
அவரது பெற்றோர் சென்று பார்த்த போது விஷம் குடித்து இறந்தது தெரிய வந்தது. உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வல்லரசு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X