search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    ஆரோவில் பகுதியில் இரவு முழுவதும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி

    புதுவையை அடுத்த ஆரோவில் பகுதியில் நேற்று இரவு மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான இரும்பையில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து இரும்பை, திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு, ஆரோவில், பட்டானூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. 

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு லேசான காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இரவு 12 மணிக்கு மழை விட்ட நிலையிலும் மீண்டும் மின் சப்ளை கொடுக்கப்பட வில்லை. ஒரு சில இடங்களுக்கு அதிகாலை 4 மணிக்கும், மற்றொரு பகுதிக்கு 6 மணிக்கும் மின் சப்ளை கொடுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான இடங்களில் இன்று காலை 9 மணிக்கு மேலும் மின் சப்ளை கொடுக்கப்படவில்லை. 

    இதனால் முதியோர்கள், குழந்தைகள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் மின் துண்டிப்பால் பள்ளி செல்லும் மாணவர்களும் இன்று காலை சரியான நேரத்துக்கு பள்ளி செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளானார்கள். 

    பொதுவாக கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க மின் இணைப்பு துண்டிக்கப்படுவது வழக்கம். ஆனால், பலத்த காற்றும் இல்லாமல், லேசான மழை பெய்ததற்காக இரவு முழுவதும் மின் இணைப்பை துண்டித்தது ஏன்? என்று அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    Next Story
    ×