search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீரைத்துறையில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது

    குடும்ப தகராறில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது செய்யப்பட்டார்.
    மதுரை:

    மதுரை கீரைத்துறை சிந்தாமணி மெயின் ரோடு, வெங்கட்ராம் பூசாரி சந்து பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 72). இவரது மகன் செல்வகுமார் (35). இவர் கே.புதூர் லூர்து நகர் 3-வது தெருவில் வசித்து வந்தார்.

    சாலையோர இடியாப்ப கடை நடத்தி வந்த செல்வகுமாருக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் தனக்கு ஆட்டோ வாங்கித்தரும்படி தந்தை மாசிலாமணியிடம் கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்று இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் கத்தியால் குத்தியதில் மாசிலாமணி பலத்த காயமடைந்தார்.  அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறை போலீசில் மாசிலாமணியின் மகள் ஜெயந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். 
    Next Story
    ×