என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16 வயது சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்22 Aug 2019 4:30 PM GMT (Updated: 22 Aug 2019 4:30 PM GMT)
கோவையில் 16 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பிரபல ரவுடியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் என்கிற ஜோஸ்வா(வயது 24). இவர் மீது 3 கொலை வழக்குகள், வழிப்பறி, அடிதடி உள்பட 27 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஜோஸ்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமியை கடத்தி கற்பழித்து விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் புலியகுளம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஜோஸ்வா தப்பி ஓட முயன்றார். இதில் கீழே விழுந்த அவருக்கு இடது கால் முறிந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X