என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலனை நம்பி வந்த மாணவி பஸ் நிலையத்தில் தவிப்பு- உல்லாசத்துக்கு அழைத்ததால் பரபரப்பு
Byமாலை மலர்22 Aug 2019 1:03 PM GMT (Updated: 22 Aug 2019 1:03 PM GMT)
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் காதலனை நம்பி வந்த மாணவியை வாலிபர்கள் உல்லாசத்துக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குள்ளனம்பட்டி:
திருப்பூரைச் சேர்ந்தவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது. (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் மதுரைக்கு ரெயிலில் வந்தார். அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது பெயர் சையது இப்ராகிம் என்று கூறி அவருடன் பேசியுள்ளார். அவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ரெயில் பயணத்தின் போதே இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.
அதன் பின் செல்போனில் பேசியபடியே தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த விபரம் சுமதியின் பெற்றோருக்கு தெரிய வரவே கண்டித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுமதியை காதலன் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தார். பின்னர் தனியார் இடத்தில் வைத்து அவருடன் உல்லாசமாக இருந்தார்.
அதன் பின்னும் தொடர்ந்து இருவரும் செல்போனிலேயே பேசி பழகி வந்தனர். மகளின் காதல் விபரம் அறிந்த அவரது பெற்றோர் செல்போனை பறித்து வைத்து சத்தம் போட்டுள்ளனர். இதனை தனது காதலனிடம் கூறி சுமதி அழுதார். தன்னை திருமணம் செய்து கொண்டு வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். நேற்று இரவு சுமதியை காதலன் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தார். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அவரை நிற்க வைத்து விட்டு தான் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி விட்டு பிறகு வந்து அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய சுமதி பஸ் நிலையத்திலேயே வெகுநேரம் காத்திருந்தார்.
பஸ் நிலையத்தில் தனியாக வெகு நேரம் நின்று கொண்டு இருந்ததை பார்த்து சிலர் அவரை அழகி என நினைத்து விபசாரத்துக்கு அழைத்துள்ளனர். இதனால் அவர் கதறி அழத் தொடங்கினார். இதை பார்த்து அங்கிருந்த கடைக்காரர்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது தான் காதலனை நம்பி வந்ததாகவும், தன்னை இங்கே நிறுத்தி விட்டு அவர் சென்று விட்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து அவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X