என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னிமலையில் காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்22 Aug 2019 11:07 AM GMT (Updated: 22 Aug 2019 11:07 AM GMT)
சென்னிமலையில் பல லட்ச ரூபாய் கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
சென்னிமலை காட்டூர் ரோட்டை சேர்ந்த தாமோதரன் மகன் பாஸ்கரன் (வயது 38). இவர் கட்டிட ஒப்பந்ததாரர். இவரது தொழில் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது.
இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் கடன் இருந்தது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் இருந்த பாஸ்கரன் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது மனைவி கவிதா (வயது 35),அவரை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் பாஸ்கரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X