search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
    X
    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

    டி.என்.டி சாதிச் சான்றிதழ் கேட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    டி.என்.டி. சான்றிதழ் வழங்க கேட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிலுள்ள தமிழ்நாடு பிரமலை கள்ளர் உறவின் முறை பேரவை தலைவர் விஜயகுமார் தலைமையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் டி.என்.டி சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க கோரியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

    பின்னர் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் (பொறுப்பு) டேனியலிடம் சென்று மனுக்கள் கொடுத்தனர்.

    இதனை பெற்றுக் கொண்ட தலைமையிடத்து துணை தாசில்தார் டேனியல் உடனடியாக இது சம்பந்தமாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    போராட்டத்தில் பேரவை செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் பேரவை நிர்வாகிகள் ராஜாங்கம், சின்ன காளை, நாகேந்திரன், கண்ணன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×