search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகை திருட்டு
    X
    தங்க நகை திருட்டு

    நாமக்கல்லில் கார் கண்ணாடியை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

    நாமக்கல்லில் கார் கண்ணாடியை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் சாமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 42). இவர் தனது மகன் சிவா மற்றும் மகள் ஷிவானி ஆகியோருடன் நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார். காரை ஓட்டலுக்கு வெளியில் நிறுத்திவிட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்ச்செல்வி, பின்னர் வீடு திரும்ப காருக்கு சென்றார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த பையில் 5½ பவுன் தோடுகள், 1½ பவுன் செயின் என மொத்தம் 7 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தமிழ்ச்செல்வி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×