என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் கார் கண்ணாடியை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்21 Aug 2019 6:01 PM GMT (Updated: 21 Aug 2019 6:01 PM GMT)
நாமக்கல்லில் கார் கண்ணாடியை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் சாமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 42). இவர் தனது மகன் சிவா மற்றும் மகள் ஷிவானி ஆகியோருடன் நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார். காரை ஓட்டலுக்கு வெளியில் நிறுத்திவிட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்ச்செல்வி, பின்னர் வீடு திரும்ப காருக்கு சென்றார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த பையில் 5½ பவுன் தோடுகள், 1½ பவுன் செயின் என மொத்தம் 7 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழ்ச்செல்வி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் சாமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 42). இவர் தனது மகன் சிவா மற்றும் மகள் ஷிவானி ஆகியோருடன் நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார். காரை ஓட்டலுக்கு வெளியில் நிறுத்திவிட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்ச்செல்வி, பின்னர் வீடு திரும்ப காருக்கு சென்றார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த பையில் 5½ பவுன் தோடுகள், 1½ பவுன் செயின் என மொத்தம் 7 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழ்ச்செல்வி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X