search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த அபுதாகீர்
    X
    தற்கொலை செய்த அபுதாகீர்

    கடையநல்லூர் அருகே நர்சிங் கல்லூரி தாளாளர் தற்கொலை

    கடையநல்லூர் அருகே நர்சிங் கல்லூரி தாளாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது43). இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் தாளாளராக இருந்து அதை நிர்வகித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அபுதாகீர் சொக்கம்பட்டி அருகே உள்ள கருப்பாநதி அணை அருகே வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி வந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அபுதாகீர் பரிதாபமாக இறந்தார்.

    அவர் குடும்ப பிரச்சினை காரணமாக வி‌ஷம் குடித்தாரா அல்லது நர்சிங் கல்லூரியில் உள்ள பிரச்சினை காரணமாக வி‌ஷம் குடித்தாரா அல்லது தீராத வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தாரா என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×