என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடையநல்லூர் அருகே நர்சிங் கல்லூரி தாளாளர் தற்கொலை
தென்காசி:
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது43). இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் தாளாளராக இருந்து அதை நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அபுதாகீர் சொக்கம்பட்டி அருகே உள்ள கருப்பாநதி அணை அருகே விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி வந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அபுதாகீர் பரிதாபமாக இறந்தார்.
அவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தாரா அல்லது நர்சிங் கல்லூரியில் உள்ள பிரச்சினை காரணமாக விஷம் குடித்தாரா அல்லது தீராத வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளால் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா என்று தெரியவில்லை.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்