என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கனூர் அருகே சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்21 Aug 2019 11:35 AM GMT (Updated: 21 Aug 2019 11:35 AM GMT)
திருக்கனூர் அருகே சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே குமராப்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பல லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிஅமைக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
மேலும் இப்பகுதியில் குடிநீர் சவுடு கலந்த நீராகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி இப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குமராப்பாளையம் மெயின் ரோட்டில் மண் பானைகளை உடைத்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆகி யோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், நீர்த்தேக்க தொட் டிக்கு ஜெனரேட்டர் வசதி அமைக்க வேண்டும், நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பல்வேறு பிரச்சினைகளை எடுத்து கூறினர்.
இதையடுத்து பெதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்கனூர் அருகே குமராப்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பல லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிஅமைக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
மேலும் இப்பகுதியில் குடிநீர் சவுடு கலந்த நீராகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி இப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குமராப்பாளையம் மெயின் ரோட்டில் மண் பானைகளை உடைத்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆகி யோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், நீர்த்தேக்க தொட் டிக்கு ஜெனரேட்டர் வசதி அமைக்க வேண்டும், நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பல்வேறு பிரச்சினைகளை எடுத்து கூறினர்.
இதையடுத்து பெதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X