search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராயபுரத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 5 வாலிபர்கள் கைது

    ராயபுரத்தில் கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    எண்ணூரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் சீனிவாசன் (வயது 52). நேற்று இரவு மாநகர பஸ்சில் சென்றார்.

    ராயபுரம் மேம்பாலம் அருகே சென்றபோது ஒரு வாலிபர் அவரது பையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். அவரை சீனிவாசன் தடுத்து மறித்தார்.

    கீழே இறங்கி விரட்ட பிடிக்க முயன்ற போது அவரை கத்தியால் தாக்கினான். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    செல்போனை திருடி சென்ற நரேஷ் (26) என்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதேபோல மற்றஒரு சம்பவமும் இதே இடத்தில் அடுத்தடுத்து நடந்துள்ளது.

    காசிமேட்டை சேர்ந்த பிரசாந்த் என்பவர் ராயபுரம் மேம்பாலத்தில் வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி ஏற முயன்றார். அப்போது ஆட்டோவில் இருந்த 3 பேர் கத்திமுனையில் செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளினர்.

    அவர் கூச்சல் போட்டதால் ஆட்டோவை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். போலீசில் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் ஒப்படைக்கப்பட்டனர்.

    விசாரணை நடத்தியதில் ராமச்சந்திரன், நவீன், மணி, சவுந்தர்ராஜன் என அவர்கள் பெயர் விவரம் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2 கத்தி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×