search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்.
    X
    மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்.

    தர்மபுரியில் அரசு மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடு பட்டனர். 

    இந்த போராட்டத்தில் பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை அரசு ஆணை இரண்டில் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

    இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×