search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழாய் உடைப்பில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறும் காட்சி.
    X
    குழாய் உடைப்பில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறும் காட்சி.

    வல்லம் பஸ் நிலையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக எம்.ஜி.ஆர் சிலை பூங்காவில் ஓடுகிறது.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேருந்து நிலையத்தில் குடிநீர் டேங்க் உள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் குடிநீர் வந்து கொண்டே இருக்கும். இந்த டேங்குக்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பகுதியில் உள்ள குடிநீர் டேங்கில் இருந்து காவிரி நீர் வருகிறது.

    வல்லம் பேருந்து நிலையம் குடிநீர் குழாயில் வரும் நீரை பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள்,வாகன ஓட்டிகள், வல்லம் பேருந்து நிலைய பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் குடிநீரை பிடித்து பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக எம்.ஜி.ஆர் சிலை பூங்காவிலும், வல்லம் பேருந்து நிலையத்திலும் ஓடுகிறது.

    எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வல்லம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×