என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வல்லம் பஸ் நிலையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேருந்து நிலையத்தில் குடிநீர் டேங்க் உள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் குடிநீர் வந்து கொண்டே இருக்கும். இந்த டேங்குக்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பகுதியில் உள்ள குடிநீர் டேங்கில் இருந்து காவிரி நீர் வருகிறது.
வல்லம் பேருந்து நிலையம் குடிநீர் குழாயில் வரும் நீரை பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள்,வாகன ஓட்டிகள், வல்லம் பேருந்து நிலைய பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் குடிநீரை பிடித்து பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக எம்.ஜி.ஆர் சிலை பூங்காவிலும், வல்லம் பேருந்து நிலையத்திலும் ஓடுகிறது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வல்லம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்