என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே தாயார் திட்டியதால் வாலிபர் தற்கொலை
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் அருகே சரல் சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு. இவரது ஒரே மகன் மணிகண்டன், (வயது 25).
இவர், கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக வீடு ஒன்று கட்டினார்கள். இதனால் கடன் ஏற்பட்டது. வாங்கிய கடனை செலுத்துவதற்காக சுயம்பு, முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் மணிகண்டன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரது தாயார் மணிகண்டனை திட்டியதாக தெரிகிறது. மனம் உடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று காலை விஷம் குடித்தார்.
பின்னர் அங்குமிங்குமாக சுற்றித்திரிந்தார். மாலையில்தான் மணிகண்டன் விஷம் குடித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக மணிகண்டன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் காப்புக்காடு அருகே கல்லப்பா விளையைச் சேர்ந்தவர் ரமேஷ், (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சரிவர வேலைக் செல்லாமல் இருந்து வந்தார். நோயாலும் அவதிப்பட்டு வந்த ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்