search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் தற்கொலை
    X
    வாலிபர் தற்கொலை

    ராஜாக்கமங்கலம் அருகே தாயார் திட்டியதால் வாலிபர் தற்கொலை

    ராஜாக்கமங்கலம் அருகே வேலைக்கு செல்லுமாறு தாயார் திட்டியதால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் அருகே சரல் சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு. இவரது ஒரே மகன் மணிகண்டன், (வயது 25).

    இவர், கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக வீடு ஒன்று கட்டினார்கள். இதனால் கடன் ஏற்பட்டது. வாங்கிய கடனை செலுத்துவதற்காக சுயம்பு, முயற்சிகளை மேற்கொண்டார்.

    ஆனால் மணிகண்டன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரது தாயார் மணிகண்டனை திட்டியதாக தெரிகிறது. மனம் உடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று காலை வி‌ஷம் குடித்தார்.

    பின்னர் அங்குமிங்குமாக சுற்றித்திரிந்தார். மாலையில்தான் மணிகண்டன் வி‌ஷம் குடித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக மணிகண்டன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் காப்புக்காடு அருகே கல்லப்பா விளையைச் சேர்ந்தவர் ரமேஷ், (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சரிவர வேலைக் செல்லாமல் இருந்து வந்தார். நோயாலும் அவதிப்பட்டு வந்த ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×