search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பொள்ளாச்சியில் போலீசுக்கு கொலை மிரட்டல்- 4 பேர் கைது

    பொள்ளாச்சியில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் விஷ்ணு பிரசாத் சக போலீசாருடன் கோட்டூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் 4 பேர் தாறுமாறாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது 4 பேரும் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்கள் 4 பேரும் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.பின்னர் போலீஸ்காரர் விஷ்ணு பிரசாத் மட்டும் தனியாக ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த 4 பேரும் ரோந்து பணியில் இருந்த விஷ்ணு பிரசாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சரவண குமார் (28), அருண் குமார் (24), மணிகண்டன் (26), உதய கிருஷ்ண குமார் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×