என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே பேரையூரில் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளை
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பேரையூரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவில் அறங்காவலராக நித்யகல்யாணி என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில் சுவர் ஏறிக் குதித்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை திருடிக் கொண்டு தப்பினர்.
மாலையில் கோவிலை திறக்க வந்தபோது உண்டியல் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து நித்யகல்யாணி, பேரையூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்துபட்டப் பகலில் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உண்டியலில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் திருடு போயிருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்