search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமூர்த்தி பவனில் கேஎஸ் அழகிரி
    X
    சத்தியமூர்த்தி பவனில் கேஎஸ் அழகிரி

    திமுக நடத்தும் போராட்டத்தில் காங். எம்.பி.க்கள் பங்கேற்பு - கே.எஸ்.அழகிரி

    காஷ்மீர் பிரச்சினைக்காக டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ராஜீவ்காந்தி. அவர் பிரதமராக இருந்தபோதுதான் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.

    இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்காக பாடுபட்டார். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கை பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார்.

    திமுக

    இன்று நாடு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜனதா அரசு சுயநலத்துடன் செயல்படுகிறது. நாளை மறுதினம் காஷ்மீர் பிரச்சினைக்காக டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களும் பங்கேற்பார்கள்.

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் பெங்களூரில் தமிழில் பாடிய பாடகர்களை தாக்கி உள்ளனர். இதற்காக கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முன்னதாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன் மவுலானா, முதன்மை பொதுசெயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்த ரத்ததான முகாமை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். 75 பேர் ரத்ததானம் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, மாணிக்கம் தாகூர் எம்.பி., செல்வ பெருந்தகை, அருள் பெத்தையா, சிரஞ்சீவி, தாமோதரன், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன் மவுலானா, முதன்மை பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், எஸ்.கே.நவாஸ், பலராமன், செல்வம், முன்னாள் எம்.பி. ராணி, டி.ஏ.நவீன், மாவட்ட தலைவர் சிவராஜசேகர், பி.வி. தமிழ்செல்வன், கடல் தமிழ்வாணன், எம்.எஸ். திரவியம், எம்.எஸ்.குமார். உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.நகர் பகுதி காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி மேற்கு மாம்பலத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பகுதி தலைவர் நாச்சிக்குளம் சரவணன், மாம்பலம் ராஜேந்திரன், தி.நகர் கார்த்திக், மாம்பலம் கணேசன், தி.நகர் விக்னேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×