என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர், ராஜேந்திர பாலாஜிக்கு இடையே முரண்பட்ட கருத்து - ஸ்டாலின்
Byமாலை மலர்20 Aug 2019 7:32 AM GMT (Updated: 20 Aug 2019 7:32 AM GMT)
ஆவின் பால் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடையே முரண்பட்ட கருத்து உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தில் தி.மு.க. சார்பில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை பெருமையாக கருதுகிறேன். ஒண்டி வீரன் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். தலைவர் கருணாநிதி ஆட்சியில் அவருக்கு மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட்டது.
2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பால் விலையை 3 முறை உயர்த்தி உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே அ.தி.மு.க. அரசு பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
‘நெஞ்சில் பால் வார்த்தார்’ என்பார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு பால் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளார்கள். ஆவின் அதிக லாபத்தில் இயங்கி வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி வருகிறார்.
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆவின் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என கூறுகிறார். முதல்-அமைச்சருக்கும், அமைச்சருக்கும் இடையே முரண்பட்ட கருத்து உள்ளது. இதில் எது உண்மை என்பதை முதலில் விளக்க வேண்டும்.
நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எங்கள் முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைக்க மாவட்டங்களை பிரித்து வருகிறார்கள். காஷ்மீர் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சினை என்றாலும் தி.மு.க. குரல் கொடுக்கும்.
துண்டு சீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘தமிழிசை சவுந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோரை போன்று பொத்தாம் பொதுவாக நான் பேசுவது இல்லை. ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடு தான் பேசுவேன்’ என்றார்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தில் தி.மு.க. சார்பில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை பெருமையாக கருதுகிறேன். ஒண்டி வீரன் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். தலைவர் கருணாநிதி ஆட்சியில் அவருக்கு மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட்டது.
அருந்ததியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3½ சதவீத இடஒதுக்கீடு தி.மு.க. தலைவர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. அந்த சட்டம் நிறைவேறும்போது தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், துணை முதல்-அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் அதை ஏகமனதாக நிறை வேற்றினேன். எனக்கு கிடைத்த பெருமை அது.
2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பால் விலையை 3 முறை உயர்த்தி உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே அ.தி.மு.க. அரசு பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
‘நெஞ்சில் பால் வார்த்தார்’ என்பார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு பால் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளார்கள். ஆவின் அதிக லாபத்தில் இயங்கி வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி வருகிறார்.
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆவின் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என கூறுகிறார். முதல்-அமைச்சருக்கும், அமைச்சருக்கும் இடையே முரண்பட்ட கருத்து உள்ளது. இதில் எது உண்மை என்பதை முதலில் விளக்க வேண்டும்.
நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எங்கள் முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைக்க மாவட்டங்களை பிரித்து வருகிறார்கள். காஷ்மீர் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சினை என்றாலும் தி.மு.க. குரல் கொடுக்கும்.
துண்டு சீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘தமிழிசை சவுந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோரை போன்று பொத்தாம் பொதுவாக நான் பேசுவது இல்லை. ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடு தான் பேசுவேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X