search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே கொள்ளையடிக்க சதி திட்டம் - 5 வாலிபர்கள் கைது

    திருவள்ளூர் அருகே கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பெருமாள்பட்டு ரெட்டைகுளம் அருகே ரோந்து சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.

    இதைபார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். சிறிது நேரம் சென்று 5 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவன் மட்டும் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சார்லஸ், வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், திருநின்றவூரை சேர்ந்த குமார், மோகன்குமார் என்பதும், இவர்கள் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதும் தெரிந்தது.

    இதையடுத்து 5 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி சென்ற பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த சின்னியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×