என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் அருகே கொள்ளையடிக்க சதி திட்டம் - 5 வாலிபர்கள் கைது
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பெருமாள்பட்டு ரெட்டைகுளம் அருகே ரோந்து சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.
இதைபார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். சிறிது நேரம் சென்று 5 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவன் மட்டும் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சார்லஸ், வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், திருநின்றவூரை சேர்ந்த குமார், மோகன்குமார் என்பதும், இவர்கள் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதும் தெரிந்தது.
இதையடுத்து 5 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி சென்ற பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த சின்னியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்