என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் கனமழை
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று கனமழை பெய்தது. இதில் பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்கியது. வாழப்பாடி அருகே சேலம் - விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய்கள் சகதியால் நிரம்பி உள்ளதால் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தது. அவர்கள் பக்கெட்டுகளில் எடுத்து தண்ணீரை வெளியேற்றினர்.
இதனால் அந்த பகுதி மக்கள் விடிய- விடிய தூங்காமல் தவித்தனர். மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர். மேலும் இந்த மழை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மாவட்டத்தில் அதிக பட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 115.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வாழப்பாடியில் 80.5, ஆத்தூரில் 38.6, சேலத்தில் 21.8, ஆனைமடுவில் 14, காடையாம்பட்டியில் 1, ஏற்காடு- 10.4, கரியகோவில் - 5, தம்மம்பட்டி - 3.2, ஓமலூர் - 1.4, மேட்டூர் - 0.2 மில்லி மீட்டர் என மாவட்டம் மொத்தம் 301.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்