search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி தாக்குதல்
    X
    தொழிலாளி தாக்குதல்

    தேனி அருகே சொத்து தகராறில் தொழிலாளியை தாக்கிய கும்பல்

    தேனி அருகே சொத்து தகராறில் தொழிலாளியை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள போடேந்திரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது42). இவருக்கும் அவரது தங்கை பொன்னுத்தாய் என்பவருக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் செல்வத்தை, பொன்னுத்தாய், அவரது கணவர் முருகன், மகன்கள் கவுதமன் (21), ரவீந்திரன் (17) ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த செல்வம் பூச்சி மருந்தை குடித்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் முருகன் உள்பட 4 பேர் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் சுப்பையன் சேர்வை சந்து பகுதியை சேர்ந்தவர் வசந்த் (32). வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுபீர் என்பவருக்கு ரூ.6 ஆயிரம் முன்பணம் கொடுத்து வேலைக்கு சேர்த்தார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு வேலைக்கு வரவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை வசந்த் திருப்பி கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த சுபீர் தனது நண்பர்களான ஈஸ்வரன், மணிகண்டன், முத்துப்பாண்டி ஆகியோரை அழைத்துக் கொண்டு வசந்தை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×