search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    அழகர்கோவில் சாலையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை கோச்சடை அசோக் நகரைச் சேர்ந்தவர் திராவிடமணி. இவரது மனைவி கலாவதி (வயது 44). இவர் நேற்று மாலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் மீன் வாங்கச் சென்றார். அழகர் கோவில் மெயின் ரோட்டில் அவர்கள் சென்றபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    அதில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கலாவதி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.

    இது குறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×