என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உத்தமபாளையம் அருகே பொதுப்பாதை பிரச்சினையில் விவசாயி மீது தாக்குதல்
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). இவருக்கு யானைகஜம் சாலையில் முந்திரி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு அருகே மணிகண்டன் என்பவருக்கும் தோட்டம் உள்ளது.
பொதுப்பாதை காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தோட்டத்தில் இருந்து பொதுப்பாதை வழியாக நடந்து வந்த பழனிச்சாமியை வழி மறித்த மணிகண்டன் அவரது மனைவி கயல்விழி, மகள் யோகேஷ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஜெயமங்கலம் மேல் தெருவைச் சேர்ந்தவர் சதீஸ் (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் சதீஸ் திருப்பூரில் இருந்தார். சம்பவத்தன்று ஊருக்கு வந்த சதீசை வழி மறித்த ராஜா தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்