என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்19 Aug 2019 8:35 AM GMT (Updated: 19 Aug 2019 8:35 AM GMT)
பாளையில் மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் தெருவில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் திரிந்தபடி இருந்தார். அவர் திடீரென அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் 2-வது மாடிக்கு ஏறிச்சென்று அங்கிருந்து கீழே குதித்தார். அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார், மாடியில் இருந்து குதித்ததால் இறந்து கிடந்த வரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுடலையாண்டி(வயது36) என்பது தெரியவந்தது. அவருக்கு கோமதி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சுடலையாண்டி, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் மனநல பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் யாருக்கும் தெரியாமல் வார்டில் இருந்து தப்பி வந்திருக்கிறார்.
பாளை மார்க்கெட் பகுதிக்கு வந்த அவர், அங்கிருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்று பாளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளை மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் தெருவில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் திரிந்தபடி இருந்தார். அவர் திடீரென அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் 2-வது மாடிக்கு ஏறிச்சென்று அங்கிருந்து கீழே குதித்தார். அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார், மாடியில் இருந்து குதித்ததால் இறந்து கிடந்த வரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுடலையாண்டி(வயது36) என்பது தெரியவந்தது. அவருக்கு கோமதி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சுடலையாண்டி, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் மனநல பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் யாருக்கும் தெரியாமல் வார்டில் இருந்து தப்பி வந்திருக்கிறார்.
பாளை மார்க்கெட் பகுதிக்கு வந்த அவர், அங்கிருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்று பாளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X