என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.
Byமாலை மலர்19 Aug 2019 8:01 AM GMT (Updated: 19 Aug 2019 8:01 AM GMT)
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ம் தேதி டெல்லியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சென்னை:
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொலைத் தொடர்புகளை துண்டித்து அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அடக்குமுறைகள், ஊடங்கு உத்தரவின் மூலம் காஷ்மீரை பா.ஜ.க. தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை பறித்துள்ளது.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி தி.மு.க. சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X