search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிவகிரி அருகே மதுபானம் விற்ற வாலிபர் கைது

    சிவகிரி அருகே மதுபானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    சிவகிரி அண்ணா வாழையடி தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகன் வேல்சாமி(வயது 32). இவர் நேற்று மாலை சந்தி விநாயகர் கோவில் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் மதுபானம் விற்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிவகிரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து வந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் வேல்சாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் 5 லிட்டர் கேனில் இருந்த மதுபானம் மற்றும் ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×