search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மீஞ்சூரில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

    மீஞ்சூரில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திபட்டைச் சேர்ந்தவர் நரேஷ்.தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் பெங்களுருக்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    இன்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது உள்ளே கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோ திறந்து உள்ளே வைத்திருந்த 5 சவரன் நகை 15 ஆயிரம் பணம், திருப்பதி உண்டியல் காணிக்கை 10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×