என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- தந்தை கைது
Byமாலை மலர்18 Aug 2019 5:13 PM GMT (Updated: 18 Aug 2019 5:13 PM GMT)
சாத்தான்குளத்தில் பெண்ணிடம் சிரித்து பேசி வாலிபரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தச்சைமொழி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56). இவரது மனைவி சமுத்திரக்கனி (50). இவர்களது மகன் முருகன் (27). தந்தை-மகன் இருவரும் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஞானராஜ் என்பவரது இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்றிரவு அவர்கள் இருவரும் கடையில் இருந்தனர்.
அப்போது உறவினரான சங்கரம்மாள் என்பவர் அங்கு வந்துள்ளார். அவரிடம் முருகன் சிரித்து பேசியதாக தெரிகிறது. இதற்கு ஆறுமுகம் தனது மகன் முருகனை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் சங்கரம்மாளிடம் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், தனது மகனை கத்தியால் வயிற்றில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முருகனின் தாய் சமுத்திரக்கனி சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X