search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரையில் ஒர்க்ஷாப் அதிபர் வீட்டில் 28 பவுன் நகை-பணம் கொள்ளை

    ஒர்க்ஷாப் அதிபர் வீட்டில் 28 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 65). இவர் அந்த பகுதியில் மோட்டார் ரீவைண்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டனர். மதியழகனும் கடைக்கு சென்று விட்டார். இரவில்தான் அவர் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு மதியழகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுப்பிர மணியபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். பீரோவில் இருந்த 28 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 21 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக மதியழகன் தெரிவித்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் இறங்கியுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ஹிந்துபுரம் வெங்கடாசலபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சாத்தையா. இவரது மனைவி விமலாராணி (55). பழங்காநத்தம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை வாலிபர் பறித்து சென்றார்.

    இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×