என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் ஒர்க்ஷாப் அதிபர் வீட்டில் 28 பவுன் நகை-பணம் கொள்ளை
மதுரை:
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 65). இவர் அந்த பகுதியில் மோட்டார் ரீவைண்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டனர். மதியழகனும் கடைக்கு சென்று விட்டார். இரவில்தான் அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு மதியழகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுப்பிர மணியபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். பீரோவில் இருந்த 28 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 21 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக மதியழகன் தெரிவித்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் இறங்கியுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்துபுரம் வெங்கடாசலபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சாத்தையா. இவரது மனைவி விமலாராணி (55). பழங்காநத்தம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை வாலிபர் பறித்து சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்