என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணம் அருகே நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள். நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கும்பகோணம் அருகே இனாம் கிளியூர் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). லோடு ஆட்டோ டிரைவர்.
இந்த நிலையில் ஹரிஹரனின் நண்பர் இல்ல திருமண விழா சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று காலை நடைபெறுவதாக இருந்தது.
இதனால் நேற்று நள்ளிரவில் ஹரிஹரன் தனது நண்பர்களான கும்பகோணத்தை சேர்ந்த முகமது (24), சாக்கோட்டையை சேர்ந்த சிவா (25), மற்றும் ஆழ்வான்கோவில் தெருவை சேர்ந்த விஜய்(25) ஆகியோருடன் சுவாமிமலை பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்து கொண்டிருந்தார்.
நள்ளிரவு ஒரு மணியளவில் 4 பேரும் திருமண மண்டபத்திற்கு எதிரே பிளக்ஸ் பேனர் கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பிளக்ஸ் போர்டின் கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் ஹரிஹரன், முகமது ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சிவா, விஜய் ஆகியோர் காயம் அடைந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமண பிளக்ஸ் பேனர் வைத்தபோது 2 வாலிபர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்