search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    அவினாசியில் விபத்து- பனியன் தொழிலாளி பலி

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    அவினாசி:

    திருப்பூரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வாளராக இருந்தார்.

    இன்று காலை கோவையில் இருந்து தனது நண்பர் பால்ஆண்டனி (30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் அவினாசி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அலெக்ஸ் மற்றும் அவரது நண்பர் பால்ஆண்டனி ஆகியோர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலெக்ஸ் பரிதாபமாக இறந்தார். பால்ஆண்டனிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×