search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பொள்ளாச்சி அருகே தரைப்பாலத்தில் தனியார் பஸ் மோதி 11 பேர் காயம்

    பொள்ளாச்சி அருகே தரைப்பாலத்தில் தனியார் பஸ் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் சேத்துமடையில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று (சனிக்கிழமை) காலை 5 .50 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இன்று காலை 6.40 மணிக்கு ஜமீன் ஊத்துக்குளியை தாண்டி ரெயில்வே தரை பாலத்தின் கீழ் பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தரை பாலத்தின் சுவரில் மோதியது .

    இதில் பஸ்சில் பயணம் செய்த கார்த்திகேயன் (28 ), செந்தில் (25), சவு கார்த்திகா (29), ராமராஜ் (52 ), நாகப்பன் (58 ), மாராத்தாள் (53), லட்சுமி ( 48), கிருஷ்ணவேணி (43 ), மற்றொரு கிருஷ்ணவேணி (28 ), சரவணன் ( 21 ), மாரியப்பன் (36) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×