என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மஞ்சளாற்றுப்படுகையில் இருந்து மாட்டு வண்டியில் சிலர் மணல் அள்ளி வந்தனர். போலீசார் சுற்றி வளைத்த போது தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவர் பிடிபட்டார்.
கணேசன், ரமேஷ், ராஜேந்திரன், பால்பாண்டி, செல்லபாண்டி, வேங்கையன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த செல்வம் (33) என்பவர் சாக்கு மூட்டையில் மணல் அள்ளி வந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இதே போல ஜங்கால்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பூதநாராயணன் (வயது 50) என்பவரும் மணல் திருடி வந்த போது கைது செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜா (55) மணல் எடுத்து வந்தது தெரிய வரவே அவரை கைது செய்தனர். கண்ணன், பால்பாண்டி, மருதை, பிச்சைமணி, ராஜேஷ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்