என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு - கணவன் போலீசில் புகார்
Byமாலை மலர்17 Aug 2019 8:38 AM GMT (Updated: 17 Aug 2019 8:38 AM GMT)
நாகர்கோவிலில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
சென்னை கூடுவாஞ்சேரி மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள், (வயது 37).
குமரி மாவட்டம் ஆளுர் வீராணி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா என்ற கோகிலா (வயது 26). இவர்கள் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. திவ்யா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு வந்திருந்தார்.
நாகர்கோவிலில் குழந்தை பிறந்த பிறகு திவ்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமானதால் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த திவ்யா திடீரென பலியானார்.
திவ்யா பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வடசேரி போலீசில் அவரது கணவர் வேலாயுத பெருமாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் விசாரணை நடத்தி வருகிறார்.
திவ்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கூடுவாஞ்சேரி மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள், (வயது 37).
குமரி மாவட்டம் ஆளுர் வீராணி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா என்ற கோகிலா (வயது 26). இவர்கள் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. திவ்யா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு வந்திருந்தார்.
நாகர்கோவிலில் குழந்தை பிறந்த பிறகு திவ்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமானதால் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த திவ்யா திடீரென பலியானார்.
திவ்யா பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வடசேரி போலீசில் அவரது கணவர் வேலாயுத பெருமாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் விசாரணை நடத்தி வருகிறார்.
திவ்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X