search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புள்ளிமான்
    X
    புள்ளிமான்

    திருமங்கலம் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

    திருமங்கலம் அருகே நாய் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, நேசனேரி, ரெங்கபாளையம் கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்கள் அடிக்கடி குடிநீர் தேடி, சாலை பகுதிக்கு வருகின்றன.

    அப்படி வரும் சில மான்கள் திருமங்கலம்-விருதுநகர் பைபாஸ் சாலையில் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டுமே 4 மான்கள் இப்படி இறந்துள்ளன.

    இன்று காலை ராயபாளையம் முனியாண்டி கோவில் அருகே, குடிநீர் தேடி புள்ளிமான் வந்தது. அந்தமானை, நாய்கள் விரட்டி, விரட்டி கடித்தன. இதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×