search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 16 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை 9 மணிக்கு 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த வாரம் 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் மூழ்கின. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் மேடான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். தற்போது நீர்வரத்து குறைந்து வருகிறது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை 9 மணிக்கு நீர் வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து இன்று நீர் திறப்பு 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    கபினி அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×