என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே பாட்டு கச்சேரியில் மோதல் - மாணவர் படுகாயம்
Byமாலை மலர்16 Aug 2019 11:10 AM GMT (Updated: 16 Aug 2019 11:10 AM GMT)
வில்லியனூர் அருகே பாட்டு கச்சேரியின் போது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பெருமாள் கோவில் திடலில் கோவில் விழாவையொட்டி நேற்று இரவு பாட்டு கச்சேரி நடந்து கொண்டு இருந்தது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த, வினய் சேகர், சூரியா ஆகியோர் தாங்கள் விரும்பும் பாடலை பாட வேண்டும் என்று கூறி கூச்சல் போட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாணவர் பிரவீன்குமார் (வயது19) இதனை தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், வினய் சேகர், சூரியா ஆகியோர் பிரவீன் குமாரை கையாலும், தடியாலும் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X