search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

    களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் உதியன் குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதிர், (வயது 32).

    விளாத்தான்கரையைச் சேர்ந்தவர் பிஜுகுமார், (41). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் சுதிர், பிஜுகுமார், இன்னொரு மோட்டார் சைக்களில் வந்த தினேஷ் (22), பிரபு (22) ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    சுதிரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதிர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிஜுகுமார் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த தினேஷ், பிரபு இருவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் சிக்கிய சுதிர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். இருப்பினும் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டு பலியாகி விட்டார். சுதிர், பிஜுகுமார் பலியான தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கும், திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் வந்தனர்.
    Next Story
    ×