search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
    X
    ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

    தஞ்சையில் ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை

    தஞ்சையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் தஞ்சை ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரெயில் புறப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள ஆதி மாரியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது என்ஜீன் டிரைவர், ஒரு வாலிபரின் உடல் இழுத்து வரப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் ரெயிலை நிறுத்தி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பலியான வாலிபரின் உடல் தஞ்சை வண்டிக்கார தெருவில் இருந்து ஆதி மாரியம்மன் கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்டது தெரியவந்தது. அந்த வாலிபர், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து உள்ளார். அவரது கையில் ‘தமிழ்செல்வி” பச்சை குத்தப்பட்டு இருந்தது.

    ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×