search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தஞ்சை அருகே விபத்தில் வாலிபர் பலி

    தஞ்சை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள குருங்குளம் மேலத்தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கருப்பையன் (வயது22). இவர் இரவு ஏழுப்பட்டியில் இருந்து மருங்குளம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே மொபட்டில் ஒரு தம்பதியினர் குழந்தையுடன் வந்தனர். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும் மொபட்டும் நேருக்கு நேர் மோதியதில் கருப்பையன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×