என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடன்குடியில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் - தொழிலாளி கைது
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு வீரலெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தனபால். இவர் சென்னையில் கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார்.
இவரது மனைவி பார்வதி (வயது 36). இவர் வீரலெட்சுமிபுரத்தில் வசித்து வருகிறார். இவர்களது உறவினரான கீழ லெட்சுமிபுரம் கனகராஜ் (38). கூலித்தொழிலாளியான இவர் குடிபோதையில் தகராறு செய்ததால் இவரது மனைவி, பிள்ளைகள் எல்லாம் இவரை விட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் கனகராஜ் பார்வதி வீட்டில் சாப்பிட்டு வந்தார். அங்கும் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்ததால் பார்வதி உணவு கொடுக்க மறுத்து விட்டார். இதனால் பார்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக கனகராஜ் பேசியுள்ளார்.
இதுகுறித்து பார்வதி குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதிகா குமார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்