என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரதமரின் தைரியமான முடிவு- ஆளுநர் பேச்சு
Byமாலை மலர்15 Aug 2019 4:18 PM GMT (Updated: 15 Aug 2019 4:18 PM GMT)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டது பிரதமர் மோடியின் தைரியமான முடிவு என ஆளுநர் பன்வாரிலால் பேசியுள்ளார்.
சென்னை:
சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார். இதில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இதன்பின் ஆளுநர் பன்வாரிலால் பேசும்பொழுது, ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்திய பொருளாதாரம் வேகமுடன் வளர்ந்து வருகிறது. பிரதமரின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது என பேசினார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பிரதமர் மோடியால் எடுக்கப்பட்ட தைரியமான முடிவு என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X