search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிமுக
    X
    மதிமுக

    புதுக்கோட்டையில் ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது

    புதுக்கோட்டை மங்களகிரியில் ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயலாளர் வக்கீல் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     ம.தி.மு.க தலைவர் வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்தல், செப்டம்பர் 15-ந் தேதி சென்னையில் நடக்க உள்ள அண்ணா பிறந்த நாள் விழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வது, தேர்தல் நிதி வசூலித்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாழ்நாள் உறுப்பினர் சேர்க்கை ஆகியவற்றை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டை மங்களகிரியில் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குருமத்தேயு ஜெபசிங் தலைமை வகிக்கிறார். மாவட்ட துணை செயலாளர்கள் வீரபாண்டி, செல்லச்சாமி, ஆத்தூர் லட்சுமணன், பேரூர் சிவஞானவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட பொருளாளர் காயல் அனுமானுல்லா வரவேற்று பேசுகிறார். 

    மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளருமான கல்லத்தியான் கலந்து கொண்டு பேசுகிறார். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×