என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தா.பேட்டை அருகே பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Byமாலை மலர்15 Aug 2019 10:39 AM GMT (Updated: 15 Aug 2019 10:39 AM GMT)
தா.பேட்டை அருகே பஸ் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (53). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது தா.பேட்டை காருகுடி கிராமம் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் ரமேஷ்சிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தா.பேட்டை அடுத்த எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (53). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது தா.பேட்டை காருகுடி கிராமம் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் ரமேஷ்சிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X