என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி கொப்பரை ஏல மையம் மூலம் ரூ.1½ கோடி பட்டுவாடா
Byமாலை மலர்15 Aug 2019 10:22 AM GMT (Updated: 15 Aug 2019 10:22 AM GMT)
பழனி கொப்பரை ஏல மையம் மூலம் 155 டன் கொப்பரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 873 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
பழனி:
பழனி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயல் ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழனியில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொப்பரை ஏல மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள மையத்துக்கு காங்கேயம், முத்தூர், பொள்ளாச்சி, மூலனூர், வெள்ளக்கோவில், சத்திரப்பட்டி, பழனி பகுதியில் இருந்து விற்பனைக்காக கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
இங்கு விற்பனை செய்யும் கொப்பரைக்கான பணம் 24 மணி நேரத்துக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 7-ந்தேதி வரையில் பழனி கொப்பரை ஏல மையம் மூலம் 155 டன் கொப்பரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 873 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.140-க்கு ஏலம் போனது. ஆனால் நேற்று நடந்த ஏலத்தில் 1 கிலோ ரூ.100-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயல் ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழனியில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொப்பரை ஏல மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள மையத்துக்கு காங்கேயம், முத்தூர், பொள்ளாச்சி, மூலனூர், வெள்ளக்கோவில், சத்திரப்பட்டி, பழனி பகுதியில் இருந்து விற்பனைக்காக கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
இங்கு விற்பனை செய்யும் கொப்பரைக்கான பணம் 24 மணி நேரத்துக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 7-ந்தேதி வரையில் பழனி கொப்பரை ஏல மையம் மூலம் 155 டன் கொப்பரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 873 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.140-க்கு ஏலம் போனது. ஆனால் நேற்று நடந்த ஏலத்தில் 1 கிலோ ரூ.100-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X